Thursday, April 12, 2012

Monday, April 9, 2012

பெண் என்பவள் …

பெண் என்பவள் ……








 
- அஞ்சலி தேவி, சென்னை
(Anjali Devi, Deputy Manager,HPCL,Chennai)


 
பெண் என்பவள்

சாதிக்கப் பிறந்தவள்!

பிறரின்

சாபங்களுக்கு

உள்ளாவதற்கு அல்ல!!



பெண்ணினமே ஓ

பெண்ணினமே !!

போராடுவோம் நாம்

ஒருங்கிணைந்து

துணிச்சலுடன்;நமக்கு

எதிரான பிரச்சினைகளை

எதிர்த்து சமுதாயத்தில் !!



நாம் தூங்கப்

பிறந்தவர்கள் அல்ல !!

துக்கமாய் ஒதுங்கி

அமர்ந்திட !!



“அடுப்பூதும் பெண்களுக்கு

படிப்பு எதற்கு”என்று

எழுப்பியகுரல்களை

எதிர்த்துஎழுச்சிக் குரல்

எழுப்பிய பாரதிஅன்று ;

சாதிக்கும் பெண்களுக்கு

சரஸ்வதிக்கு சமானமாக

சிலை

வடித்திருந்திருப்பார் இன்று !!



மதர் தெரேசா, ஒரு

அகில உலகமும்

போற்றும் அன்புத்தாய் !!!



பி.டி.உஷா அனைவருக்கும்

பிடித்தமான ஒரு

வினளயாட்டு வீராங்கணை !!



ராணி லக்குமிபாய்

அந்நிய நாட்டு

ராட்சசர்களை

அடித்து விரட்டி

லட்சியம் படைத்த

ஒரு வீரப்பெண்மனி

நமது சுதந்திர

வரலாற்றில் !!!



சானியா மிர்சா

சாதனைக் கொம்பை

எட்டிய

இளமைப் பெண்மனி

டென்னிஸ் விளையாட்டில் !!!


சாதனைப் பட்டியலில்
பலபேர்!!! நாமும்
சாதிக்கப் பிறந்தோரே ;
சந்திப்போம் பிரச்சினைகளை
சவாலாய் ;
சாதிப்போம் !!!
சாதனை படைப்போம் !!!
வாருங்கள்!!! என் இந்தியச்
சகோதரிகளே …………….

Monday, April 2, 2012

கிராமியப்பாடல்


கிராமியப்பாடல்




அஞ்சலீ தேவீ, சேண்ணை

Anjali Devi, Deputy Manager,HPCL,Chennai



நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சுக்குள்ள வெச்சுக்கிட்டு

நெசத்த மறந்துப்புட்டு உன்

நெழலைத்தேடி நிக்கிறேனே

நிக்கிறேனே மாமா நானும்

நிக்கிறேனே மாமோய் // 1 //



ஊரெல்லாம் பொங்கல் வெச்சு

மஞ்சத்தாலி கட்டி வெச்சு

மானமுள்ள பானைகள்தான்

சந்தோஷத்தில் பொங்கியதே

பொங்கியதே மாமாஅட

பொங்கியதேமாமோய் // 2 //


தயங்காம[ல்] தங்கத்தாலி

எங்கழுத்தில் கட்டிப்புட்டு,

என்னை உன்னோடு

ஊர்கூடி,கூட்டிப்போக

தயாராமாமாநீயும்

தயாராமாமோய் // 3 //



அந்திப் பொழுதுலதான்

அகல் விளக்க ஏத்தி வெச்சு,

அன்போடு அகம் குளிர,

உன்னோட வரவுக்குத்தான்

காத்திருந்தேன்

காத்திருந்தேன்மாமா நானும்

காத்திருந்தேன்மாமோய்

என்ஆசைமாமாஅட

என்ஆசைமாமோய் // 4//