கிராமியப்பாடல்
அஞ்சலீ தேவீ, சேண்ணை
Anjali Devi, Deputy Manager,HPCL,Chennai
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சுக்குள்ள வெச்சுக்கிட்டு
நெசத்த மறந்துப்புட்டு உன்
நெழலைத்தேடி நிக்கிறேனே
நிக்கிறேனே மாமா நானும்
நிக்கிறேனே மாமோய் // 1 //
ஊரெல்லாம் பொங்கல் வெச்சு
மஞ்சத்தாலி கட்டி வெச்சு
மானமுள்ள பானைகள்தான்
சந்தோஷத்தில் பொங்கியதே
பொங்கியதே மாமாஅட
பொங்கியதேமாமோய் // 2 //
தயங்காம[ல்] தங்கத்தாலி
எங்கழுத்தில் கட்டிப்புட்டு,
என்னை உன்னோடு
ஊர்கூடி,கூட்டிப்போக
தயாராமாமாநீயும்
தயாராமாமோய் // 3 //
அந்திப் பொழுதுலதான்
அகல் விளக்க ஏத்தி வெச்சு,
அன்போடு அகம் குளிர,
உன்னோட வரவுக்குத்தான்
காத்திருந்தேன்
காத்திருந்தேன்மாமா நானும்
காத்திருந்தேன்மாமோய்
என்ஆசைமாமாஅட
என்ஆசைமாமோய் // 4//