Monday, March 11, 2013

அன்பான என் தோழிக்கு ஆசையாய் ஓர் கடிதம்…..




கவிதை       
                                  அன்பான என் தோழிக்கு ஆசையாய் ஓர் கடிதம்…..





கிரன்



கண்கள் சொல்கின்றன
உனைக்
காண வேண்டுமென்று ;
இதயம் சொல்கிறது
உன்னுடன்
இனைய வேண்டுமெனறு;
இரணடற அல்ல,
ஒன்றாய் ;
ஒன்றுடன் ஒன்றாய்;
மனம் சொல்கிறது உன்னுடன்
மகிழ்ச்சியுடன்
பேசிக் கொண்டேயிருக்க
வேண்டுமென்று;
கால்கள் சொல்கின்றன
உன்னுடன்
காலாற சற்றே
நடக்கவேண்டுமென்று ;
கைகள் சொல்கின்றன உன்
கரங்கள் பிடித்து இந்த
உலகையே
உலா வர வேணடுமென்று;
உண்மையிலேயே
ஏதேனும் ஒரு
வேணடுகோளுக்கு
இணங்கலாம் என்றால்……
உரிமையில்லா நட்பு
என்றும் நிரந்தரமில்லை என்று
உன் உதட்டோரங்களில்
வெளிவந்த வார்த்தைகளே,
என் நினைவுகளில்
இன்றும் நிஜங்களாய்……
நீயோ என்
நினைவலைகளி்ல் என்றென்றும் !!!

கவிதை - இந்திய தாயே


கவிதை     
  இந்திய தாயே


ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.


இந்திய தாயே  - என்
இதயத்தில் வீற்றிருக்கும்
தாயே…….
இந்திய மண்ணில்
பிறப்பதை விட ;
இந்திய மண்ணுக்காக
பிறந்ததில் பெருமை அடைகின்றேன்  !
இந்திய மண்ணில்
இறப்பதை விட ;
இந்திய மண்ணிலேயே வாழ்ந்து ,
இந்திய மண்ணுக்காக இறப்பதில்
ஆனந்தம் அடைவேன் !!

அமிர்தத்தை எங்களுக்கு
பாலாக வார்ததாய்
அழகிய தாயே ! உன்
புழுதி மண்ணில்
புரளவில்லையென்றால்….
புகழ் ஏது எங்களுக்கு ?
உன் மடியில்
உறங்குவதே
உவகை,உத்தமம் !
உத்தம புத்திரனாய்
வாழ்ந்து , உன்
               புகழ் காப்பேன்
என் இந்திய தாயே….