Saturday, April 25, 2009

கவிதை


சிகரத்தை நோக்கி...


- கவிச் சிற்றரசு ப. சொக்கலிங்கம், கோவை

கலைமகளின் வரம் பெற்று,
கல்வியின் கரம் பற்றி
வெள்ளிச் சிறையை விட்டு,
வெளிவந்த பேண்ணினமே !

மெல்லினம் நீ என்று
எள்ளிநகை செய்தோரை,
‘புல்’ இனமாய் நீ நினைத்து,
புறப்பட்டாய் புயலெனவே !

சோதனைகள் பல கடந்து,
சாதனைகள் நீ படைத்தாய்
வேதனைகள் இனி இல்லை,
வெற்றி ஒன்றே உன் எல்லை !

இரண்டில் ஒரு பங்காய்
இங்கு நீ இருக்கையிலே,
முடியாமல் போகாது
மூன்றில் ஒரு பங்கு !

முடியுமென்று முயலுங்கள்
முடியாதது ஒன்றுமில்லை !
மண்ணுலகம் பொன்னுலகாய்,
மாறிவிடும் உன்னாலே !

Friday, April 17, 2009

கவிதை


தமிழருவி



- கே. சுபஸ்ரீ, கோவை.



மலையின் ஏற்றத்தில் –
அலையின் பாய்ச்சலில் –
அருவியின் துளிகளில்
உருகி வழியும் தமிழ் !
பாக்களில் கவிஞரும்
பூக்களாய் புலவரும்
விழிகளுள் இட்டு
எமாழியின் இசையை –
நெஞ்சம் தொட
கொஞ்சும் தமிழ் பாவை;
இனிய பூஞ்சோலையில்
பனித்துளியாய் தமிழ் –
குயில்களின் பாடலில் –
மயில்களின் ஆடலில்
காற்றின் உரசலில்
ஆற்றின் கரையில்
மாங்கனியின் இனிப்பில் –
தங்கத்தின் ஒளியில்
ஓடி வரும் மழலையில் –
தேடிச் செல்லும் இறைவனில்
பொங்கிப் பெருகும் அன்பினில்
பெருகி ஓடும் மகிழ்வில் –
கண்டேன் திகட்டாத தமிழமுதை !
கொண்டேன் உயிரினும் மேலாய் !
ஒங்கு புகழ் வான் வையகம் –
எங்கும் தழைத்திருக்க தமிழொலி
நீங்காதிருக்க வாழ்த்துவோம்
மங்காத புகழ் தமிழ்த்தாயை !
அழகில் நங்கையான தமிழிசையை
முழங்குவோம் முரசொலி கொட்டி –
செம்மொழியாம் இம்மொழியில்
அம்மை அப்பனைக் கண்டேன் !
கனியமுதான தமிழ் மொழியின்
தனிச்சிறப்பு திக்கெட்டும் பரவட்டும் !

Tuesday, April 14, 2009

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



வாழ்த்து



- சு. கிருஷ்ண குமார், கோவை



சித்திரை முதல்நாளில்



சின்னதாய் ஒரு முடிவு செய்வோம்



முடியும் என்றே நாம் நினைக்க



முடியும் என்று



முடியாது என்ற ஒன்று நாம் நினைக்க



கூடாது என்று



இன்று நாம் செய்யும் நன்மை ஒன்று



என்றும் நம்மை காக்கும் என்று



ஆதலின்



நாம் வாழ்த்த முடியும் என்று



நாம் நன்மை செய்ய முடியும் என்று



அனைவருக்கும் இனிய இன்ப



தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.