“உருவே குருவே சரணம்”
-J. Subramani,(Ph.D), Chennai
பேனாக்கள் மையுருக
பொய்யுருகும்
உன் நானாக்கள்
பொய்யுருகா மெய்யுருக
கனாக்கள்
கண்ணுரங்கும்
சமீக்ஷைகள் அறிந்த
சூட்சுமமே
உலகுள்ளவரை ஆளும்
ராஜ்ஜியத்தின் இசை ராஜாவே!
சொல்லாததும்
வெல்லாததும் இல்லாதது இனி இசையில்
புரிதலும்அறிதலும்
யுகமறியம் இசை மேஸ்ட்ரோவே
ஓங்கார ஒலி கேட்டு
ஓவியமும் தலையசையும்
சிற்பமும் கண்ணீர்
கசியும்
இசை ஜீ(வா) ஜீவனை கிரகித்து
உயிர்பிக்கும்
ஈரம் சொறிந்த
பிம்பம் நீ ! பிரம்மன் நீ!
உன் விரல் குனிய
இசை நிமிரும்
வேடங்கள் துறந்த
வெளியே இருந்தாலும் நீ இமயம்
இனி பிறந்தாலும் நீ
இமயம்
இசை மறையே பேரருளே
வாய்ப்பிருந்தும்
வார்த்தைகள் எழா
எழுந்து நின்று தலை
வணங்குவோம் போற்றுவோம்
இசை பிரணவனே “உருவே குருவே சரணம்”