Friday, November 9, 2012

கவிதை - மகாத்மா காந்தி




கவிதை       

மகாத்மா காந்தி


ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.



மாமனிதர் மகாத்மா
மனிதருள் மாணிக்கம்
மகான்களுள் மேதை
     அத்தகைய
மேதை குறித்து
மகிழ்ச்சிப்புகழ் மாலை
தொடுத்திட,
மன நிறைவினால்
       எனக்கு வார்த்தை
மலர்கள் போதவில்லை!!


வாய்மையே வெல்லும்
என்பது அவர் நமக்கு
தந்திட்ட தெய்வ வாக்கு !


போர் முனையில் பயன்படுத்தும்
வாளின் முனையைவிட
எழுதுகோலின் முனையே
கூர்மையானது   என்பது
அவர் எண்ணம் ;
அசைக்க முடியாத
நம்பிக்கை ;  அவர்
உலகிற்கு எடுத்துரைத்த
உண்மை ;
அது மட்டுமல்லாமல் ,
முனைப்புடன் முழுமூச்சுடன்
முயன்று போராடுவோருக்கு
முன்னின்று கை கொடுத்தவர் !!


போராடினார் தன்
இறுதி மூச்சுவரை-
இந்தியாவின் சுதந்திரத்திற்கு !
வாழ்நாட்கள் முழுவதையும்
இதயப்பூர்வமாக
இந்தியாவுக்கு அர்ப்பணித்து !!

தன் ஆன்மாவை
அன்பு” , அகிம்சை
என்பவற்றினால் சுத்திகரித்து ;
மகா ஆத்மாவாகவே
மாறி வாழ்ந்து,
மதயானையாய் தலைவிரித்தாடும்
மதக்கலவரத்தை
அறவே ஒழித்தவர் !!

தன் அகிம்சை எனும்
அறவழிக்  கொள்கையினால்
அனைவரது உள்ளத்தையும்
கொள்ளை கொண்டவர் !!
சத்யாக் கிரகம் என்னும்
போராட்டத்தினால்
சதிகார வெள்ளையர்களை
                 வெளியே துரத்தியவர் !!

மகாத்மாவின் கொள்கைகளையே
நாமும் பின்பற்றுவோம் !!
நலம்பல நாடுவோம் !!
அவரைப் போற்றி,
நாளும் வணங்கிடுவோம் !!
ஜெய்ஹிந்த் !  ஜெய்ஹிந்த் !!
ஜெய்ஹிந்த் !   ஜெய்ஹிந்த் !!
ஜெய்ஹிந்த் !   ஜெய்ஹிந்த் !!

No comments:

Post a Comment