Tuesday, January 9, 2024

கவிதை - எழுந்து நில் எழுச்சியுடன்


கவிதை                      எழுந்து நில் எழுச்சியுடன்

. அஞ்சலி தேவி, A ANJALI DEVI, 

உயர் மேலாளர், SR.MANAGER,

இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM


நண்பா ஆம்!! எழுந்து நில்!

எழுச்சியுடன்!!!

 

அலுவலகத்துக்கு ஆளோடு

ஆளாக வருகை தருவதோடு

மட்டுமல்லாமல்,

அலுவலகப் பணியை

அலுப்பே இல்லாமல்

பணியாற்று தோழா!!

 

மாலைகள் தன்னாலே

வந்து குவியும் உன் தோளில்!!

மனமுவந்து மகிழ்ச்சியுடன்

ஏற்றுக்கொள்!!

மற்ற பணியாளர்களுடன்

மாற்றானைப் பற்றி

புறணி பேசுவதை

நிறுத்தி விடு !!  நண்பா

 

புத்தி்க் கூர்மை கொண்டு

புரட்சிகள் பல படைத்திடு;

சக பணியாளர் தோழர்களுடன்

கூட்டணி அமைத்து !!

புரட்சித்தாயின் புத்திரனாய்

புகழ்  பல படைத்திடு!!

 

அன்பே சிவம்

அன்பே கடவுள்

அன்பே அல்லா

அன்பே தேவன்

என்று எத்தனை வழிகளில்

திரித்துக் கூறினாலும்,

அனைத்து செயல்களுக்கும்

அன்பு ஒன்றுதானே அடிப்படை!!!

 

அன்போடு பழகு;

அனைத்து உயிர்களிடமும்!!

அண்ட சராசரமும்

அடிபணியும்; உன் அன்புக்கு!!

மணித்துளிகள் பல

மயக்கத்தில் ஆழ்ந்திடாதே!!

சில நிமிடங்களே ஆனாலும்; பிறரை

சிலிர்க்க வைத்திடும்

சாதனைகள் செய்திடு !!

சிந்திக்க வைத்திடும்

சிரிப்பினால்

சிந்திக்க வைத்திடு !!  நண்பா

Sunday, December 24, 2023

கவிதை - அன்பே

கவிதை                                   


அன்பே


. அஞ்சலி தேவி, A ANJALI DEVI 

உயர் மேலாளர், SR.MANAGER

இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM


 

அன்பே…, உனை ஆசையுடன்

அணைத்துக்கொள்வதா இல்லை

செல்லமாகத்தான் கடிந்து கொள்வதா

ஏதும் இயலவில்லையே

ஏனோ புரியவில்லையே

மிக அருகில் வந்தால் நான்

வெகு தொலைவில்

அல்லவா

செல்கின்றாய் நீ

இதுதான் நெருக்கத்தின் நெறிமுறையோ

அதிக ஆத்மார்த்தமான அன்பின் அடையாளமோ

Tuesday, October 13, 2015

கூட்டுக்குடும்பம்

ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.

கவிதை                                   கூட்டுக்குடும்பம்

வாழ்ந்தோம் !
இயற்கையோடு இணைந்து ;
கூட்டுக்குடும்பமாய் அன்று  !
மனிதர்கள்
மரங்களோடு  இணைந்து ;
பறவைகள்
கூடுகளோடு இணைந்து  ;
கூடுகள்
மரங்களோடு  இணைந்து ;
புழு பூச்சிகள்
புற்களை உண்டு களித்து  !!
இன்றோ கூடுகளும்
இல்லை
கூட்டுக்குடும்பங்களும்

இல்லை !!

Monday, October 12, 2015

கௌரவ விருது

ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.
கவிதை                                 கௌரவ விருது


சிந்தனையாளனாய்,
சிறந்து சிரத்தையுடன்,
பணியாற்றுவோரை,
கௌரவிக்கும் விருது !!

தன் அயராத
உழைப்பினாலும்,
மிகுந்த தன் ஆர்வத்துடனும்,
முனைந்து  பணியாற்றி,
நிறுவனத்தை
அளவில்லா ஆனந்தத்தில்
ஆழ்த்தும்படி
பணியாற்றுவோரை,  
சிறப்பிக்கப்படுவதற்காக
வழங்கப்படும்
விருது !!

தனக்கு அளிக்கப்பட்டுள்ள
கடமைகளை மட்டுமல்லாமல்,
பொறுப்புணர்ச்சியுடன்,
மற்ற அனைத்து
பணிகளையும்,
தானே மனமுவந்து
மகிழ்ச்சியுடன் ஏற்று,
செய்வோருக்காக
கிடைக்கப் பெற்ற
மர்மப்புதையல் !!

நிறுவனத்தின்
இலக்குகளை, தன்
இலக்காக கொண்டு,
தன்னால் இயன்றவரை
சாதிக்கும் சாதனையாளருக்காக,
இயற்றப்பட்ட
இன்னிசை மழை !!

நம் நிறுவனத்தை
நிலையான
வெற்றிப்பாதையில்
நிலைநாட்ட,
பாடுபட்டு, பங்குபெற்றோருக்கெல்லாம்,
நிறுவனம்
அவர்களை அங்கீகரித்து
அளிககப்படும்
பொருட்செல்வம்  !!
பெருமையான
பொக்கிஷமே நம் 
கௌரவ விருது !!!.

இன்று கௌரவ விருது 
வாங்கி தம் வாழ்வில்
கௌரவமாய்,
வெற்றிப் படிகளில்
நடைபோட்டுக் கொண்டிருக்கும்,
நம்மோடு பணிபுரியும்,
 சக தோழி தோழர்களை,
 இருகரம் கூப்பி,
  இணைந்து
  வாழ்த்துவோம் !!

  வணங்குவோம் !!  வாருங்கள் !!!

Sunday, October 11, 2015

பற்றாக்குறை

ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.

கவிதை                                   பற்றாக்குறை

அழும் குழந்தைக்கு
பால் இல்லையாம்  !
ஆனால் அங்கே
அபிஷேகம் பாலினால்
அம்பாளுக்கு !!
பால் பற்றாக்குறையா….
இல்லை
மனப்பாங்கு பற்றாக்குறையா…..

இதில் ?