கவிதை
தவிர்ப்போமே!! சாலை விபத்துக்களை…
ஆ. அஞ்சலி தேவி / A ANJALI DEVI
சந்திப்போமா…சாலை
விபத்துக்களை…
இல்லை!! இல்லை !!
சிந்திப்போமே !
சிரத்தையாய் …..
சிறிதளவேனும்…..நம்
சிந்தையில் பாதுகாப்பின்
இன்றியமையாமை உணர்ந்து !!
உள்ளத்தில் உறுதி மொழி
எடுத்துக் கொள்வோமே !!
இன்று முதலே,இக்கணப் பொழுது
முதலே,
“ தவிர்ப்போம்சாலை
விபத்துக்களை”
என்று !!
விபத்தினால் வரும்
உயிரின் இழப்பு
உனக்குப் புரியாததா….
ஆகும் பொருள்
சேதங்களைப் பற்றி
அறியாயோ…. இல்லை,
அறிய பொறுமை
இல்லையா……
கொஞ்சம் கவனம்
உன் செயல்பாடுகளில் !!
அதிகமான கவனம்
உன் அணுகுமுறையில் !!
“பாதுகாப்புக்காக
பணியாற்றுவேன்“
என்ற மனப்பாங்கு கொண்டு
நித்தம்நித்தம்
நிம்மதிப் பெருமூச்சு
எப்போதும் நம் நெஞ்சினில்!!
சிந்திப்போமே !!
தவிர்ப்பு முறைகள் பற்றி;
தவிர்ப்போமே!! சாலை
விபத்துக்களை…
# துணை மேலாளர் / DY.MANAGER
இந்துஸ்தான் பெட்ரோலியம் /HINDUSTAN PETROLEUM
சென்னை /CHENNAI