கவிதை
இந்திய தாயே
ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.
இந்திய
தாயே - என்
இதயத்தில்
வீற்றிருக்கும்
தாயே…….
இந்திய
மண்ணில்
பிறப்பதை
விட ;
இந்திய
மண்ணுக்காக
பிறந்ததில்
பெருமை அடைகின்றேன் !
இந்திய
மண்ணில்
இறப்பதை
விட ;
இந்திய
மண்ணிலேயே வாழ்ந்து ,
இந்திய
மண்ணுக்காக இறப்பதில்
ஆனந்தம்
அடைவேன் !!
அமிர்தத்தை
எங்களுக்கு
பாலாக
வார்ததாய்
அழகிய
தாயே ! உன்
புழுதி
மண்ணில்
புரளவில்லையென்றால்….
புகழ்
ஏது எங்களுக்கு ?
உன்
மடியில்
உறங்குவதே
உவகை,உத்தமம் !
உத்தம
புத்திரனாய்
வாழ்ந்து
, உன்
புகழ் காப்பேன்
என்
இந்திய தாயே….
No comments:
Post a Comment