Friday, January 25, 2013

கவிதை - இல்லறக் காதல்


கவிதை
இல்லறக் காதல்



கிரன்




கண்ணடித்தேன்;  நீ
கனியவில்லை; ஆனால்
கைப்பிடித்தேன் உனை
மணவறையில் மணாளனாய் ;
மதிமயங்கி விட்டாயே !!

அழகிய  புடவை 
ஒன்றை, ஓராயிரம் 
கடைகளில்,
கதிகலங்கி தேர்வு செய்து,
கண்ணே என்று
அன்பளிப்பாய் 
அன்புடன் அளித்தேன்;
அணிய  மறுத்தாயே  நீ !

சேலை செந்தாமரையாய்
மிளிர்கிறது நீ உடுத்தியதால் என்று
உரைத்ததும் நான் - நீ
உறைந்து போய்
மகிழ்ச்சி பொங்க, உந்தனுடன் எனை
அரவணைத்தாயே
அன்பே நீ
அன்புடன் என்மீது
காதல் கொண்டதால்தானோ ………

No comments:

Post a Comment